சுகயீன விடுகைப் போராட்டம் கைவிடப்பட்டது!

இன்று  ஜனாதிபதி மாளிகையில் - கல்விசார் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் - காணப்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து – நாளை 26 ஆம் திகதி நடைபெறவிருந்த சுகயீன விடுகைப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

அரசியல்  பழிவாங்கல் நியமனம் என்னும் போர்வையில் - தகுதியற்றவர்களுக்கு வழங்கப்படவிருந்த முறையற்ற நியமனத்தை நிறுத்தக் கோரி – கல்விசார் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை சுகயீனப்போராட்த்தை அறிவித்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட தயாரான நிலையில் இருந்த போது - இச்சந்திப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 இதில் - தற்போது வெளிவந்துள்ள பட்டியலை நிறுத்துவதாகவும், இதற்காக மூவர் அடங்கிய விசாரணைக் குழுவினை அமைத்து அதனைப் பரிசீலிப்பதாகவும், அதன் அடிப்படையில் உண்மையிலேயே எவராவது – அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டிருந்தால் அவை தொடர்பாக மட்டும் பொதுச்சேவை ஆணைக்குழுவிடம் அனுமதி பெற நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உறுதிமொழி வழங்கப்பட்டதுடன் மேலும் சில இணக்கப்பாடுகளும் காணப்பட்டன.

ஆயினும் - இவ்விடயத்தினை எழுத்துமூலம் உறுதிப்படுத்துமாறு – தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தியமைக்கு அமைய – ஜனாதிபதியினால் எழுத்துமூல உறுதிப்பாடும் வழங்கப்பட்டுள்ளதாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

இவ்வாறு காணப்பட்டுள்ள இணக்கப்பாடு காரணமாக – நாளை 26 ஆம் திகதி நடைபெறவிருந்த பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

No comments