வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் புத்த சிலை அமைப்போம் என்கிறது ஐ.தே.க


வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் புத்த சிலைகளை நிர்மாணிக்கப்பட உள்ளதாக, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவு தினம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 94 ஆவது பிறந்த தினத்தையொட்டி நாடளாவிய ரீதியில் மாபெரும் புத்தர் சிலைகளை நிர்மாணிக்கவுள்ளதாக தெரிவித்தார். இதன்படி வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும்  முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்திட்டம்,  எதிர்வரும் 23 ஆம் திகதி  அனுராதபுரத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக கடந்த உள்ளூராட்சித் தேர்தலின்போது விஞ்ஞாபனத்தில் வடக்கு கிழக்கில் ஆயிரம் பௌத்த விகாரைகள் அமைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments