தமிழ் மாணவன் கனடாவில் சுட்டுக்கொலை! - நள்ளிரவில் சம்பவம்
Lester B. Pearson கல்லூரிக்கு அருகாமையில் நேற்றுமுன்தினம் இரவு 11:55 மணியளவில் இவரது உடல் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவகம் ஒன்றில் இரவுக் கடமையை முடித்து விட்டு, உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று விட்டு திரும்பிய போது, இவர் சுடப்பட்டுள்ளார். குறித்த மாணவனிடம், கொள்ளையடித்த பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய ரொரண்டோ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Post a Comment