அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு


நாட்டில் தற்போது சீரற்ற கால நிலை காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அசாதாரண கால நிலை காரணமாக 7 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.அத்துடன், நாடு முழுவதும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பலரும் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மின்னல் காரணமாக ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments