வவுனியாவில் ஆசிரியரைத் தாக்க முற்பட்ட மாணவன் கைது!

வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் ஆசிரியரை தாக்க முற்பட்ட மாணவனை நேற்று ஈச்சங்குளம் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

புதுக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் 19 வயதுடைய மாணவன் கடந்த சில நாட்களாக பாடசாலைக்கு சமூகமளிக்காததையடுத்தே குறித்த மாணவனின் வகுப்பாசிரியர் மாணவனின் தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை வீட்டுக்கு சென்று குறித்த பாடசாலை மாணவனை தாக்கியுள்ளார். தந்தையின் தாக்குதலினால் கோபமுற்ற மாணவன் நேற்றையதினம்  பாடசாலைக்கு சென்று ஆசிரியரை தாக்க முயற்பட்ட போது,  உடனடியாக பாடசாலையின் அதிபர் காவல்துறைக்கு தகவல் வழங்கியதையடுத்து காவல்துறையினர் மாணவனை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக  மேலதிக விசாரணைகளை  வவுனியப  காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments