பிரித்தானியாவில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல்

இன்று (20.05.18) தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு.


இந் நிகழ்வில் மூத்த முன்னால் போராளி திரு அஜித் அவர்கள் பொதுச் சுடரினை ஏற்றி நிகழ்வினைத் தொடக்கிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஈகைச் சுடரினை திருமதி மகேஸ்வரி கிருஸ்ணபிள்ளை ஏற்றிவைக்க, பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவுடன் இந்த விடுதலைக்காக களமாடிய முன்னால் போராளி திரு தமிழவன் மலர் மாலை அணிவித்தார்.

தொடர்ந்து மக்களின் தீப, மலர் வணக்கத்துடன் கலை நிகழ்வுகள் நடைபெற்றது . கவிதை, பாடல், பேச்சுக்கள் போன்ற நிகழ்வுகளில் நீண்டகாலம் விடுதலைப் போராட்டத்தில் பயணித்த முன்னால் போராளி திரு தர்மா (சுந்தரலிங்கம் கணேசலிங்கம் ) அவர்களின் பிரிகேடியர் பால்ராஜ் பற்றிய சிறப்புரை இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments