பசுக்கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!


பெருமளவிலான பசுக்கள் கொலை செய்யப்பட்டு அரச நாடாளுமன்ற உறுப்பினரான மஸ்தான் என்பவரிற்கு சாவகச்சேரியிலிருந்து புத்தளம் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பசு வதைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை சாவகச்சேரி மக்களும் பொது அமைப்புக்களும் இன்று நடத்தியுள்ளன. இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 10.00 சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பித்து பிரதான வீதி வழியாகப் பயணித்து சாவகச்சேரி நகர சபையை சென்றடைந்தது. 


சமூக நலனில் அக்கறையுள்ள அனைவரும்  பங்குகொண்ட குறித்த விழிப்புணர்வு போராட்ட முடிவில் தென்மராட்சி பிரதேச செயலரிடமும் சாவகச்சேரி நகரசபை செயலாளரிடமும் மகஜர்கள் கையளிக்கப்பட்டிருந்தது.


ஈழம் சிவசேனை இவ்வார்ப்பட்டத்தை நடத்தியிருந்தது.

No comments