கிழக்கில் ஆட்சியமைக்க உதவிய உறுப்பினர்கள் மீது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சட்ட நடவடிக்கை!


தமது கட்­சி­யின் ஒழுக்க விதி­களை மீறிச் செயற்­பட்ட உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளதாக தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் செய­லா­ளர் செ.கஜேந்­தி­ரன் தெரி­வித்­தார். “தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யைச் சேர்ந்த உறுப்­பி­னர்­கள் ஈபி­டிபி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி ஆகி­ய­வற்­றுக்கு ஆத­ரவு வழங்­கி­யமை தொடர்­பி­லேயே இந்த விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இதற்­காக சம்­பந்­தப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளுக்கு எழுத்­து­மூ­ல­மான கடி­தங்­கள் அனுப்பி வைக்­கப்­ப­டுள்­ளன. அவர்­க­ளைப் பிர­தேச சபை உறுப்­பி­னர் பத­வி­யில் இருந்து நீக்­கு­வது, கட்­சி­யின் உறுப்­பி­னர் பத­வி­யில் இருந்து என்­பன தொடர்­பாக சட்ட ஆலோ­சனை பெற்று வரு­கின்­றோம். ஆலோ­ச­னை­யின் பிர­கா­ரம் அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்' என்­று அவர் கூறியுள்ளார். வடக்­கின் உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் ஈபி­டி­பி­யு­டன் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் ஆட்சி அமைத்து வரு­வ­தாக தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யி­னர் குற்­றம்­சாட்டி வந்த நிலை­யில், கிழக்­கில் ஈபி­டிபி மற்­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யு­டன் இணைந்து இது­வரை இரண்டு சபை­க­ளில் ஆட்சி அமைக்க முன்­னணி உறுப்­பி­னர்­கள் ஆத­ரவு வழங்­கி­யுள்­ள­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

No comments