மட்டக்களப்பில் நினைவேந்தப்பட்டார் மாமனிதர் சிவராம்

மாமனிதர் சிவாராம் அவர்களின் 13-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளன.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு மறைக்கல்வி நிலையத்தில் மாமனிதர் சிவராம் (தராக்கி) நினைவுகூரப்பட்டார்.

நினைவேந்தல் நிகழ்வில் வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய முன்னணின் அமைப்பாளர் எனப் பலரும் கலந்துகொண்டு சிவராமை நினைவுகூர்ந்தனர்.

No comments