மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒருவர் தீக்குளிப்பு!

பிரதமர் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு அருகே உள்ள சித்தோடு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது25) என்பவர் தீக்குளித்துள்ளார்.

பொம்மை வியாபாரம் செய்து வரும் தர்மலிங்கம் அம்மா - அப்பா கிடையாது பாட்டி ஆதரவில் வசித்து வருகிறார். இவர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு தனது வீட்டிலிருந்து மண்ணெண்யை கொள்கலனுடன் வெளியே வந்தார். தனது வீட்டு சுவற்றில் “மத்திய அரசே கர்நாடக அரசே காவிரி நீர் தமிழ்நாட்டின் உயிர்நீர், எடப்பாடி திரு.பழனிசாமி நீங்கள் தமிழனா? இல்லையா? தமிழக மக்களிடம் துணிந்து சொல்லுங்கள் பார்க்கலாம், தமிழகம் வருகிற நரேந்திர மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது” என்று கூறி தீக்குளித்துள்ளார்.

No comments