ஆப்கானில் தலிபான்கள் தாக்குதல்! 15 படையிர் பலி!

ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்த்தில் உள்ள குஜா ஓமரி மாவட்டத்தில் நேற்று இரவு தலிபான் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியதில் 15 ஆப்கான் படையினர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இம்மோதலில் ஆப்கான் படையினர் திருப்பித் தாக்கியதில் 25 தனிபான்கள் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

பல மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த தாக்குதலில் மாவட்ட கவர்னர், உளவுத்துறை இயக்குநர் மற்றும் துணை போலீஸ் அதிகாரி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments