அரபிக்கடலில் காணாமல் போன விமானத்தை பாகிஸ்தான் தேடி வருகிறது


அரபிக்கடலுக்கு மேலாகப் பறந்துகொண்டிருந்து கே2 ஏர்வேஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட போயிங் 737 சரக்கு விமானம் ஒன்று கராச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளது.

விமானத்தில் ஐந்து பணியாளர்களுடன் இருந்த போயிங் சரக்கு விமானத்தை பாகிஸ்தான் தேடி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து புறப்பட்டு, கராச்சி நோக்கிச் சென்ற பாகிஸ்தான் விமான நிறுவனத்தின் 737-400 ரக விமானம், வழிசெலுத்தல் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவித்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9:18 மணியளவில் (16:18 GMT) வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்ததாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

கடைசியாக அனுப்பப்பட்ட அதன் இருப்பிடத் தகவலின்படி, அது 335 மீட்டர் (1,100 அடி) உயரத்தில் இருந்ததுடன், நிமிடத்திற்கு 22,400 அடி அல்லது மணிக்கு சுமார் 400 கிலோமீட்டர் வேகத்தில் கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. கராச்சிக்கு மேற்கே சுமார் 155 கடல் மைல் (287 கி.மீ அல்லது 178 மைல்) தொலைவில் அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் ஒன்றும் இரண்டு கடற்படை விமானங்கள் ஆகியவை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

இதுவரை எந்த சிதைவுகளோ அல்லது உயிர் பிழைத்தவர்களோ கண்டுபிடிக்கப்படவில்லை.

No comments