தமிழ்நாட்டு அமைச்சர் வன்னி அரசை சந்தித்தார் சிறீதரன்


தமிழ்நாடு மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சரும், நீண்டகால அரசியல் செயற்பாட்டாளரும், ஈழத்தமிழ் மக்களுடைய விடுதலைக்காக குரல்கொடுத்தவருமான அமைச்சர் வன்னி அரசை, அவரது அமைச்சு அலுவலகத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது, சமூக நீதித்துறை அமைச்சராகத் தனது பணிகளைச் சிறப்பாக ஆற்றிவரும் அமைச்சர் வன்னி அரசுக்கு வாழ்த்து தெரிவித்து, சந்திப்பின் நினைவாகப் புத்தகம் ஒன்றையும் சிறீதரன் வழங்கிவைத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் C. ஜோசப் விஜய் தலைமையிலான அரசில், சமூக நீதித்துறை அமைச்சராகவும், அக்கட்சியின் மாநில விவகாரங்கள் குறித்த கொள்கைக் குழுவின் அங்கத்தவராகவும் பணியாற்றி வரும் ஒரு மூத்த அரசியல் தலைவராக வன்னி அரசு விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments