சாலே விடுதலையா? 10ம் திகதி அறிவிப்பு!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஸ் சாலேவை வைத்திய பரிசீலனைக்கு உட்படுத்தி பிணையில் விடுதலை செய்வது குறித்த ஆணை இம்மாதம் 10ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
சுரேஸ் சலே சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனு இன்று (04) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் அதனை தெரிவித்துள்ளது.
மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஸ் சாலேவை மருத்துவ நிபுணர்கள் குழுவின் முன்பாக முன்னிலைப்படுத்தி அறிக்கை கோருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிடக் கோரி சட்டமா அதிபரால் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த ஆணை, எதிர்வரும் 10ஆம் திகதி(10.06.2026) அன்று அறிவிக்கப்படும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஸ் சாலேவிற்கு உத்தரவிட்டதாக நம்பப்படும் கோத்தபாய மற்றும் சகபாடிகளான இரு இராணுவத்தளபதிகளை நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment