மரணத்தில் சந்தேகம்!

 


மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச தரப்பினை சிறை தள்ளும் பின்னணியில் சிறீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் சந்தேகத்திற்குரியது என கோட்டை நீதவானிடம் இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மரணம் தொடர்பில் தடயவியல் நிபுணரால் பிரேதப் பரிசோதனை தேவை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கொள்ளுப்பிட்டி, பெட்ரிஸ் பிளேஸ், எண் 38 இல் உள்ள அவரது இல்லத்தில் கபில சந்திரசேன உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் போது பல கோடி பணத்தை இலஞ்சமாகப் பெற்றதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் ஊழல் மோசடி குற்றச்சாட்டில் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச இருவரும் கைதாகலாமென எதிர்பார்க்கப்பட்டிருந்தது.


No comments