மரணிக்கவாவது விடுங்கள்!
வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள மயிலிட்டி மற்றும் பலாலி பகுதிகளில் உள்ள தங்களது பூர்வீகக் காணிகளை வழங்குமாறு கோரும் மக்களின் போராட்டம் ஆட்சியாளர்களது கண்டுகொள்ளப்படாத சூழலிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
எங்களை எங்களுடைய காணிக்குள் வாழ விடுகிறீர்கள் இல்லை. எங்களை கடைசி நேரத்தில் மரணிக்கவாவது விடுங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்பாதுகாப்பு வலயங்காரணமாக 36 ஆண்டுகளாக இடம் பெயர்ந்து நிர்க்கதியாக நிற்கும் நிலையில், தரைமட்டமாக்கப்பட்ட மயிலிட்டி காணிக்கு முன்னால் மூன்றாவது வாரமாக அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
காணி எமக்கு கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்; என மக்கள் தெரிவித்துள்ளனர்.அனுர அரசாங்கம் தமிழ் மக்களிற்கான வாழ்வுரிமையை மீட்டுத் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டகாரர்கள்; முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment