வீதி பிரச்சினைகளிற்காகவும் தலைவர்கள் வீதியில்!
தேசிய பிரச்சினைகளை தாண்டி தற்போது வீதி பிரச்சினைகளிற்காகவும் தலைவர்கள் வீதியில் இறங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தென்மராட்சியின் வறணி குடத்தனை வீதி திருத்தம் சீராக நடைபெறவில்லையென மாசேரி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடம் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு கஜேந்திரகுமார் தனது கட்சி செயலாளர் செல்வராசா கஜேந்திரன் சகிதம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்துள்ளார்.
இதனிடையே வீதி அமைக்கும் சாவகச்சேரி பிரதேசசபை முன்னணியின் ஆட்சியிலுள்ளது.

Post a Comment