எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 250!



 செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, மேலுமொரு ஒரு கைக்குழந்தையினுடையது உட்பட நான்கு எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இன்று திங்கட்கிழமை அடையாளம் காணப்பட்ட இந்த நான்கு எலும்புக்கூடுகளும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்து, புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய அகழ்வு பணிகளின் முடிவில், புதைகுழியிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வமாக அகழ்ந்தெடுக்கப்பட்ட மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 247 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே செம்மணி புதைகுழியின் காலப்பகுதி தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சை நீடிக்கின்றது.

புடையினரால் யாழ்.குடாநாடு கைப்பற்றப்பட்ட 1996ம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியென சில தகவல்கள் கூறிவருகின்ற போதும் முள்ளிவாய்க்காலில் சரணடைந்தவர்களதுடையதென சில தரப்புக்கள் கூறிவருகின்றன. 


No comments