நிதி இல்லை? :வீணாக அலட்ட தேவையில்லை!
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும் சட்டப் பிரச்சினைகளை நாடாளுமன்றமே தீர்க்க வேண்டும். தேர்தலை நடத்தும் துல்லியமான திகதியை இப்போது கூற முடியாவிட்டாலும் விரைவில் அத்தேர்தல் நடத்தப்படும். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதி முழுமையாக டிட்வா புயல் பாதிப்பு நிவாரணங்களுக்குப் பயன்படுத்தப்படவில்லை. அவசரத் தேவைகளுக்காக மிகச் சிறியதொரு தொகையே அங்கிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே நிதி இல்லை என்று யாரும் வீணாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லையென அமைச்சரவைப் பேச்சாளரான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளரான டில்வின் சில்வாவின் கருத்தை அதே அரசாங்கத்தின் மறுத்துக் கூறியிருப்பது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவது மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆளுங்கட்சியின் தலைமைக்குள் முரண்பாடு தோன்றியுள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது. அந்தத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியானது அண்மையில் ஏற்பட்ட 'டிட்வா' புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கட்டியெழுப்புவதற்காக முழுமையாக ஒதுக்கப்பட்டுவிட்டது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழ் கட்சி தலைவர்கள் தேர்தல் நடத்தப்படும் திகதியை எங்கோ இருக்கும் ஒரு கட்சியின் செயலாளர் தீர்மானிக்க முடியாது. நாட்டின் தேர்தல்கள் எப்போது நடத்தப்பட வேண்டும் என்பதை நாடாளுமன்றம் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.

Post a Comment