முன்னிலையாவேன் :மகிந்த!
இலஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு தனக்கு அறிவிக்கப்பட்ட திகதியில் முன்னிலையாவேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மறைந்த முன்னாள் சி.டி.ஏ. கபில சந்திரசேனவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, இன்று காலை (10) சென்றபோது, ஊடகங்களிடம் பேசிய முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாளை மறுநாள் (12) இலஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment