உரிமை கோரப்படாத சடலங்களால் பரபரப்பு !
மட்டக்களப்பு வாவியில் நீரில் மூழ்கிய நிலையில், அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று வியாழக்கிழமை (07) மாலை மீட்கப்பட்டுள்ளன. உரிமை கோரப்படாத சடலங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றியுள்ளது.
மட்டக்களப்பு சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில், இரண்டு சடலங்கள் மிதந்து கரை ஒதுங்கியிருப்பதை இன்று மாலை அப்பகுதி மக்கள் அவதானித்து தகவல் வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் பிரிவு அதிகாரிகளினால் சடலங்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள்? என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
தற்போது, நீதிமன்ற அனுமதியைப் பெற்று சடலங்களைப் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர்; முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் காவல்துறையினர்; மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment