யாழில். சொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புங்குடுதீவு பகுதியை சேர்ந்த சிறிரமணன் நிதுர்சன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார்.
புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில், தனியார் தங்குமிட விடுதி ஒன்றிற்கு சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Post a Comment