எபோலா பரவல்: சர்வதேச அவசரநிலையை அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு


கொங்கோ ஜனநாயகக் குடியரசு (டி.ஆர்.சி) மற்றும் உகாண்டாவில் ஏற்பட்ட எபோலா நோய்ப் பரவலை , உலக சுகாதார அமைப்பு (WHO) இன்று ஞாயிற்றுக்கிழமை  சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலை என அறிவித்துள்ளது. 

இந்த நோய்ப் பரவல், பெருந்தொற்று அவசரநிலைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறியதுடன், கொங்கோ ஜனநாயகக் குடியரசுத் தலைவர் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள், நோய் மேலும் பரவுவதற்கான அதிக அபாயங்கள் உள்ளன என்றும் எச்சரித்துள்ளது.

புண்டிபுக்யோ வைரசால் ஏற்பட்ட இந்தத் திடீர்ப் பரவலால் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பலர் உயிரிழந்துள்ளனர் என்று ஐ.நா. சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று சனிக்கிழமை நிலவரப்படி, கொங்கோ ஜனநாயகக் குடியரசின் இடுரி மாகாணத்தில் 80 பேர் உயிரிழந்துள்ளனர் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் எட்டு பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது மற்றும் 246 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

 புண்டிபுக்யோ வகை கிருமிக்கு தடுப்பூசியோ, குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லை என கொங்கோ ஜனநாயகக் குடியரசின் சுகாதார அமைச்சர் சாமுவேல்-ரோஜர் கம்பா கூறியதாக ஏஎஃப்பி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வகை கிருமியின் இறப்பு விகிதம் மிகவும் அதிகம். இது 50% வரை எட்டக்கூடும்.

 உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவிலும், காங்கோ ஜனநாயகக் குடியரசில் பயணம் செய்தவர்களுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில், ஒரு மரணம் உட்பட, இரண்டு பேருக்கு ஆய்வில் தொற்று உறுதிசெய்யப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments