ஈரானிய எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பதை அமெரிக்கா நீட்டிக்கும் - டிரம்ப்
மின் உற்பத்தி நிலையங்களை அழிக்கும் காலகட்டத்தை 10 நாட்களுக்கு ஏப்ரல் 6 வரை அமெரிக்கா இடைநிறுத்தும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், ஈரான் அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மிகவும் சிறப்பாகச் சென்று கொண்டிருப்பதாகவும் டிரம்ப் எழுதியிருந்தார்.
48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல தெஹ்ரான் அனுமதிக்காவிட்டால், ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா குண்டு வீசும் என்று கடந்த வார இறுதியில் டிரம்ப் கூறியிருந்தார்.
பின்னர் அவர் அந்த இறுதி எச்சரிக்கையை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்து, தற்போது மீண்டும் அந்த இடைநிறுத்தத்தை நீட்டித்துள்ளார்.

Post a Comment