ஈரான் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தி விரிவுபடுத்தும் என இஸ்ரேல் அறிவிப்பு


ஈரான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்கள் தீவிரமடைந்து விரிவடையும் என்று இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறினார்.

தானும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இஸ்ரேலில் உள்ள பொதுமக்கள் மீது ஏவுகணைகளை வீசுவதை நிறுத்துமாறு ஈரான் ஆட்சிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தோம் என்று இஸ்ரேல் காட்ஸ் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.

எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், துப்பாக்கிச் சூடு தொடர்கிறது. எனவே, ஈரானில் (இஸ்ரேலிய இராணுவத்தின்) தாக்குதல்கள் தீவிரமடைந்து. இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிராக ஆயுதங்களை உருவாக்குவதற்கும் இயக்குவதற்கும் அந்த ஆட்சிக்கு உதவும் கூடுதல் இலக்குகள் மற்றும் பகுதிகளுக்கும் விரிவடையும் என்று காட்ஸ் கூறினார்.

இந்தப் போர்க்குற்றத்திற்காக ஈரான் ஆட்சி கடுமையான, அதிகரித்து வரும் விலைகளைக் கொடுக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

இஸ்ரேலின் வலுவான ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பு இருந்தபோதிலும், சில ஈரானிய ஏவுகணைகள் அந்நாட்டை அடைந்து பல இடங்களைத் தாக்கியதில், ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

No comments