யாழில்.மோட்டார் சைக்கிள் - பேருந்து விபத்து ; உதைப்பந்தாட்ட நடுவர் உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் உதைப்பந்தாட்ட வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் உதைப்பந்தாட்ட நடுவருமான யூட்  (வயது -27) என்பவரே உயிரிழந்துள்ளார். 

தனது விளையாட்டு கழகத்திற்கான சீருடைகளை யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொண்டு , மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , செம்மணி பகுதியில் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் யாழ்ப்பாண போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அதேவேளை , குறித்த விபத்து இடம்பெற்ற வேளை வீதியில்,  பயணித்த முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து , வயல் வெளிக்குள் பாய்ந்து விபத்துக்களாகியமையும் குறிப்பிடத்தக்கது. 



No comments