யானை-மொட்டு கூட்டு இனியில்லை!
எதிர்வரும் தேர்தலில் ரணிலை பொதுஜன பெரமுன ஒருபோதும் ஆதரவளிக்காது. ரணிலை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கோ, வரவிருக்கும் தேர்தல்களில் அவரை வழிநடத்துவதற்கோ அல்லது ஆதரவளிக்கவோ எந்த எண்ணமும் இல்லை என பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
UNP யின் கொள்கைகளுக்கும் பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கும் இடையிலான இணக்கமின்மையே இதற்கு காரணம். முன்னதாக ரணிலை ஜனாதிபதியாக்க ஆதரவளித்திருந்த நிலையில், பின்னர் கொள்கைகளில் வேறுபாடு காணப்பட்டது. இருப்பினும், தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுடன் இணைந்து பொதுஜன பெரமுன செயல்படும் என பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
Post a Comment