கைதுகளின் மத்தியில் தேர்தல்!



தென்னிலங்கையில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக கும்பல்கள் மீதான வேட்டைகளின் மத்தியில் மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அவ்வகையில்  தேர்தலை நடத்துவதற்கான முக்கிய நகர்வாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை மக்கள் நலன் சார்ந்த பாதீடாக முன்வைப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நேரடியாக தாக்கம் செலுத்தும் விதத்தில் புதிய வரிகள் எதுவும் அமுல்படுத்தப்படாது எனவும் தெரியவருகிறது.

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள குழுக்கள் ஒழிப்பு போன்ற செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு ஆதரவான மனோநிலை கட்டமைக்கப்படுகின்றது.

இந்நிலையில், தற்போதைய சூழல் அரசாங்கத்துக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதால் விரைவில் தேர்தலை நடத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கட்சி தலைவர்கள் கூட்டத்தையும் ஜனாதிபதி நடத்தவுள்ளார்.தேர்தல் எந்த முறையில் நடத்தப்படும் என்பது தொடர்பில் உறுதியான தீர்மானமொன்றை எடுப்பதற்காகவே கூட்டம் நடத்தப்படவுள்ளது.

எனினும் தென்னிலங்கையில் மாகாணசபை தேர்தலில் தனித்து வெற்றிபெறக்கூடிய சூழல் அனுர அரசிடமில்லையென எதிர்கட்சிகள் தெரிவித்துவருகின்றன.


No comments