மண்டைதீவு மைதானத்திற்குள் துப்பாக்கி ரவைகள்


யாழப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதானம் அமையவுள்ள காணிக்குள் காணப்பட்ட துப்பாக்கி ரவைகள் நீதிமன்ற அனுமதியுடன் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

மண்டைத்தீவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் நிலத்தில் புதையுண்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் துப்பாக்கி ரவைகளை அகழ்ந்து எடுக்க அனுமதி கோரி ஊர்காவற்துறை நீதாவன் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தனர்.

அதன் அடிப்படையில் துப்பாக்கி ரவைகளை அகழ்ந்து எடுக்கும் பணிகளை இன்றைய தினம் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதித்ததை தொடர்ந்து துப்பாக்கி ரவைகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

No comments