மூதூரில் படுகொலை செய்யப்பட்ட தொண்டு நிறுவன பணியாளர்களின் நினைவேந்தல்
மூதூரில் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் 17 நபர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 19 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதனை நினைவுபடுத்தும் முகமாக நினைவு தினம் திருகோணமலையில் இடம்பெற்றது.
இதன் போது மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரான்ஸ் நாட்டை தலைமையகக் கொண்டு இயங்கிய குறித்த தன்னார்வ நிறுவனமான ACF பணியாற்றிய 17 ஊழியர்கள் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.
Post a Comment