மட்டக்களப்பு சிறுவன் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) காலையில் காணாமல் போன சிறுவன் காத்தான்குடி குபா பள்ளி வாவிபகுதியில் முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர் .
காத்தான்குடி 5 ஆம் குறிச்சி ஊர்வீதியைச் சேர்ந்த அனஸ்சுலைம் அப்துல்லாஹ் (06) எனும் சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் காலையில் வீட்டை விட்டுச் சென்ற அவர் காணாமல் போயிருந்த நிலையில் பெற்றோரும் குடும்பத்தினர் அயலவர்கள் அவரை தேடி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் வாய் பேச முடியாத விசேட தேவையுடையவராகும். சடலம் காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி குபாஜும்ஆப் பள்ளிவாசல் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் காத்தான்குடி காவல் நிலைய பொறுப்பதிகாரி ரத்னாயக்காவின் தலையில் சென்ற காவல்துறையினர் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. காத்தான்குடி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment