ஈரானுடனான போர்ப் பதட்டங்கள்: மத்திய கிழக்கிலிருந்து தூதரக பணியாளர்கள் வெளியேற்றம்!


ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள தொய்வு, பாதுகாப்பு நிலைமையை சீர்குலைக்கும் அச்சுறுத்தல் காரணமாக, மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்க பணியாளர்கள் வெளியேற்றப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

அது ஆபத்தான இடமாக இருக்கலாம் என்பதால் அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்று டிரம்ப் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பணியாளர்கள் மாற்றப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து கேள்வி எழுப்பியபோது  டொனால்ட டிரம்ப கூறினார்.

நாங்கள் வெளியேறுமாறு முன்னறிவித்தல் கொடுத்துள்ளோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

இந்தப் பிராந்தியத்தில் பதட்டங்களை எவ்வாறு தணிக்க முடியும் என்று ஊடகவியலாளர்கள் கேட்டபோது அவர்களிடம் அணு ஆயுதம் இருக்க முடியாது. மிகவும் எளிமையானது. நாங்கள் அதை அனுமதிக்கப் போவதில்லை.

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் பகுதியளவு வெளியேற்றத்திற்கு தயாராகி வருவதாகவும், பஹ்ரைன் மற்றும் குவைத்திலிருந்து தன்னார்வமாக புறப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், அந்நாட்டைத் தாக்கப் போவதாக டிரம்ப் பலமுறை மிரட்டல் விடுத்துள்ளார்.

சமீபத்திய முன்னேற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில், வெளியுறவுத்துறை
 புதன்கிழமை தனது உலகளாவிய பயண ஆலோசனையைப் புதுப்பித்தது. பிராந்திய பதட்டங்கள் அதிகரித்ததால், அவசரகாலம் அல்லாத அமெரிக்க அரசாங்க ஊழியர்களை வெளியேற வெளியுறவுத்துறை ஜூன் 11 அன்று உத்தரவிட்டது என்று ஆலோசகர் கூறினார்.

அமெரிக்காவின் முக்கிய கோரிக்கையான யுரேனியத்தை செறிவூட்டுவதை நிறுத்த தெஹ்ரான் ஒப்புக்கொள்ளும் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி புதன்கிழமை தெரிவித்தார்.

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அந்தப் பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்களைத் தாக்கி பதிலடி கொடுக்கும் என்று ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே புதன்கிழமை தெரிவித்தார். ஈராக், குவைத், பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா தனது இராணுவத் தளங்களைக் கொண்டுள்ளது.

No comments