யாழில் இந்திய யோகா?



இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆதரவாளர்களுடன் சர்வதேச யோகா தினம் 2025 யாழ் கலாச்சார மையத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.யோகா பயிற்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 1,700 இற்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டதாக யாழிலுள்ள இந்திய துணைதூதரகம் அறிவித்துள்ளது.

இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி வரவேற்க விழாவில், யாழ்ப்பாண மாநகர சபை மேயர் விவேகானந்தராஜா மதிவதானி, வடமாகாண முதன்மைச் செயலாளர் தனுஜா முருகேசன், கல்வி அமைச்சின் செயலாளர் பேட்ரிக் திரஞ்சன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் டி. சதியமூர்த்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிவகொழுந்து சிறிசத்குணராஜா, மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர்.


No comments