செம்மணி : அகழ்வு ஆரம்பம்!



செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கைக்குழந்தை உட்;பட்ட மூவரின் உடல்கள் முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்டர் ரக்  தமது அன்புக்குரியவர்களை தொலைத்த உறவுகளை சந்தித்தேன். பெண்கள் 1990 களின் நடுப்பகுதியில் தமது கணவன்மாரை இழந்துள்ளார்கள். தாங்கள் நேசித்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் அவர்கள் துன்பப்பட்டுக் கொண்டுள்ளார்கள். அவர்களோடு பேசும்போது அத்துன்பம் என்னையும் ஆட்கொண்டுள்ளது. 

எனவே ஒரு படி மேல் நீதி நியாயம் பொறப்பு கூறல் என்பவற்றின் ஊடாகவே ஒரு நியாயமான நிலை ஏட்ட முடியும். அல்லாவிடின் அது ஒரு மிகவும் மன வருத்தத்துக்குரிய விடயமேயெனத்தெரிவித்துள்ளார். 

எனவே தடயவியல் நிபுணர்களினால் ஒரு சுயாதீனமானதும் முழுமையானதுமான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.இதன் மூலம் தமது உறவுகளை தொலைத்த குடும்ப அங்கத்தவர்களின் காயங்களுக்கும் துன்பங்களுக்கும் ஒரு முடிவை எட்ட முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த அவர் செம்மணி புதைகுழியினை நேரில் பார்வையிட்ட பின்னரே தனது கவலை மிக்க உரையினையாற்றியிருந்தார்.


No comments