ரணில் ஒரு பேயன்!
ரணில் ஒரு பேயன். அவன் உலகம் சுற்ற செலவு செய்த கணக்கு வழக்கு எத்தனை கோடியென தெரியுமாவென பொதுவெளியில் முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவை திட்டித்தீர்த்துள்ளார் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்.
இன்றைய தினம் பூநகரி பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணிலை திட்டிதீர்த்துள்ளார் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியிலிருந்த காலப்பகுதியில் பூநகரி வாடியடி நகரமயமாக்கலிற்கென 500 மில்லியன் நிதியை வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கியிருந்தார்.
எனினும் ஜனாதிபதியாக அனுர பதவியேற்றபின்னராக அத்திட்டத்தை இரத்து செய்திருந்தார். இந்நிலையில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக முன்னெடுக்கப்பட்ட பெரும் வேலைத்திட்டங்கள் நின்று போயிருந்தன.
இந்நிலையில் இன்றைய தினம் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பங்கெடுத்திருந்த பூநகரி பிரதேசசபை தவிசாளர் சிறீரஞ்சன் தற்போதைய அரசினால் இரத்து செய்யப்பட்ட பூநகர வாடியடி நகரமயமாக்கல் திட்டத்தை மீள முன்னெடுக்க நடவடிக்கையெடுக்குமாறு கோரியிருந்தார்.
இந்நிலையில் உணர்ச்சிவசப்பட்ட இளங்குமரன் ரணில் ஒரு பேயன்.அவன் உலகம் சுற்ற செலவு செய்த கணக்கு வழக்கு தெரியுமாவென கேள்வி எழுப்பியதுடன் தேர்தல் காலத்தில் சொன்ன பொய்யான வாக்குறுதிகளை நம்பவேண்டாமென்றார்.
வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கியதொன்றை பொய்யென சொல்லமுடியுமாவென கேள்வி எழுப்பிய போதும் அதனை இளங்குமரன் ஏற்றுக்கொள்ளமறுத்து திட்டித்தீர்த்துள்ளார்.
தென்னிலங்கையில் அண்மைக்காலமாக ஆளும் தரப்பு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்களை கைது செய்வதும் திட்டிதீர்ப்பதுமான மடைமாற்ற அரசியலை முன்னெடுப்பதாக கூறப்படுகின்ற போதும் அவமரியாதையான பேச்சுக்களை தென்னிலங்கை அரசியல்வாதிகள் பேசுவதில்லை.
இந்நிலையில் வடக்கில் புதிதாக முளைத்துள்ள அரை அவியல் அரசியல்வாதிகள் முன்னாள் ஜனாதிபதி 30வருடத்திற்கு மேற்பட்ட கால அரசியலில் உள்ள ஒருவரை வடிகட்டிய பேயன் அவமதித்து பேசியமை பங்கெடுத்திருந்த அனைவரையும் முகம் சுழிக்க செய்திருந்தது.
Post a Comment