செம்மணி:வலிதருகிறது!
யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தின் புதைகுழியில் குழந்தையை அணைத்தவாறாக தாய் ஒருவரதும் குழந்தையினதும் என்புக்கூடுகள் இன்று மீட்கப்பட்டள்ளது.
செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழிகள் அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டமாக இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில், கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய முதல்கட்ட அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.
மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19 மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட நிலையில், புதைகுழி மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.
மனிதப் புதைகுழி' என்ற அடையாளப்படுத்தலுக்கு அமைய இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதேவேளை, யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment