கதிரை பத்திரம்!


வடகிழக்கிலுள்ள உள்ளுராட்சி சபைகளது ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் கட்சிகள் போட்டிபோட்டவாறாக உள்ளடி வேலைகளை முன்னெடுத்துவருகின்றன.

இந்நிலையில் பெரும்பான்மை மூலம் ஆட்சியை கைப்பற்றிய பூநகரி பிரதேசசபையின் முதலாவது அமர்வு அமைதியான முறையில் இன்று நடந்தேறியுள்ளது.தமிழரசுக்கட்சியின் சிவஞானம் சிறீதரனது ஆதரவு தரப்பினை சேர்ந்த பெரும்பான்மை உறுப்பினர்கள் சகிதம் பூநகரி மற்றும் கரைச்சி பிரதேசசபைகள் போட்டிகள் ஏதுமின்றி ஆட்சியை தக்கவைத்துள்ளன.

இதனிடையே கதிரைகளை தக்க வைக்க இலங்கை தமிழரசுக் கட்சி ஈபிடிபியின் ஆதரவை கோரியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரனும் இன்று மாலையில் நல்லூர் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டுள்ளனர்.

உடன்படிக்கை இன்று (11.06.2025) கொழும்பில் உள்ள சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

உடன்படிக்கையின்படி நல்லூர் பிரதேச சபையில் முதல் இரண்டு வருடங்கள் தவிசாளர் பதவி தமிழ் மக்கள் கூட்டணிக்கும், அடுத்த இரண்டு வருடங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் வழங்கப்படுகின்றது.

இந்த உடன்படிக்கை நல்லூர் பிரதேச சபைக்காக மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டாலும், பிற இடங்களில் தமிழ் மக்கள் கூட்டணி இலங்கைத் தமிழரசுக் கட்சியை முழுமையாக ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments