மட்டக்களப்பில் சஜித்:யாழில் டக்ளஸ்:முட்டுக்கொடுப்பு!



மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக ஜக்கிய மக்கள் சக்தி ஆதரவுடன் இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்த ஊடகவியலாளரான சிவம் பாக்கியநாதன்    தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த சிவம் பாக்கியநாதனை அதே கட்சியை சேர்ந்த மாசிலாமணி சண்முகலிங்கம் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நவரெத்தினராசா ரகுபரன்  வழிமொழிய வேறு தெரிவுகள் இன்மையால் அவர் ஏகமனதாக மட்டு மாநகரசபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்தோடு பிரதி முதல்வராக வைரமுத்து தினேஸ்குமார் அவர்கள் போட்டிக்கு மத்தியில் மொத்த 34 வாக்குகளில் 18 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபையில் 16 ஆசனங்களை பெற்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து 18 ஆசனங்களுடன் ஆட்சியமைத்துள்ளது.

இதனிடையே யாழ்.மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவிததுள்ளார்;.

அதேவேளை யாழ் மாநகர சபையின் துணை முதல்வர் பதவிக்கு இம்மானுவேல் தயாளனின் பெயரையும் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  




No comments