தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசிதவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!


தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவின் விளக்கமறியலை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் நீடித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் துசித ஹல்லொலுவ, கடந்த மே மாதம் 30 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் வரையில் விளக்க்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தார். 

இந்நிலையில் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை, அவரின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்துள்ளது. 

No comments