கம்பளையைச் சேர்ந்த குடும்பம் இந்தியாவில் தஞ்சம்!


கண்டியை சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். 

கம்பளை பகுதியைச் சேர்ந்த முஹம்மது கியாஸ் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும், தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி பகுதியை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்றடைந்துள்ளனர்.

தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் 5 பேரையும் மீட்டு, மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்துள்ளனர். 


No comments