யாழ் . போதனா பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பணிப்புறக்கணிப்பில்
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப் . போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும் , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தமக்கு, சம்பள உயர்வு கோரியும் , தற்போது பிறிதொரு நிறுவனம் ஒன்று, எம்மை பொறுப்பெடுக்க வேண்டிய நிலையில் , அந்நிறுவனம் எம்மை உரிய முறையில் பொறுப்பெடுக்கவில்லை, உடனடியாக அந்நிறுவனம் எம்மை பொறுப்பெடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் போராட்டம் காரணமாக , வைத்தியசாலையின் பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு என்பன கேள்வுக்குள்ளாகியுள்ளது.
அத்துடன் , நோயாளர்களை பார்வையிட வருவோர் கட்டுப்பாடுகள் இன்றி வைத்தியசாலை விடுதிகளுக்கு செல்வதனால் , நோயாளிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதுடன், சிகிச்சை வழங்குவதிலும் நெருக்கடி நிலைமை காணப்படுகிறது
Post a Comment