திட்டமிட்டபடி தேர்தல்:மே 6 இல்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்ட திகதியில் நடைபெறும் எனவும் அந்தத் திகதியில் எந்தத் திருத்தங்களும் செய்யப்படாது எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் கருத்து தெரிவிக்கையில், “உத்தியோகபூர்வ வாக்களார் அட்டைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி தபால் நிலையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், ஏப்ரல் 20 ஆம் திகதி விசேட வாக்காளர் அட்டை விநியோக நாளாகக் கருதப்படுமென தெரிவித்துள்ளார்.
இதனிடையே தேர்தல் தொடர்பில் இதுவரை 527 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 04 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 492 முறைப்பாடுகளும் ஏனைய விடங்கள் தொடர்பில் 31 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment