நிராகரிப்பா? - இல்லையா? குழப்பம்!
உள்ளூராட்சித் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், உத்தரவிட்ட நிலையில் அதற்கு எதிராக தேர்தல் திணைக்களம் உயர் நீதிமன்றை நாடியுள்ளது.
முன்னதாக மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வில் நீதியரசர் (செயல்பாட்டுத் தலைவர்) எம்.டி. முகமது லாஃபர் மற்றும் நீதியரசர் கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவை பிறப்பித்தது.
எனினும் அத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டு சில மணி நேரங்களில் உயர் நீதிமன்றம் அதே போன்ற 59 மனுக்களை அடியோடு நிராகரித்துள்ளது.
இந்நிலையில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், உத்தரவிட்ட நிலையில் அதற்கு எதிராக தேர்தல் திணைக்களம் உயர் நீதிமன்றை நாடியுள்ளதால் நாளைய தினம் நீதிமன்ற தீர்ப்பு கவனத்தை ஈர்த்துள்ளது
Post a Comment