இந்தியாவுக்குள் நுழைகிறது ஃபெங்கல் சூறாவளி புயல்: இலங்கை முழுவதும் மழை மற்றும் பலத்த காற்று தொடர்கிறது!


தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெங்கல் புயல் நேற்றிரவு 30ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் வட தமிழகம் - புதுச்சேரி கடற்கரையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு-தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. 

தீவின் வானிலையில் இந்த அமைப்பின் தாக்கம் மேலும் படிப்படியாக குறைந்து தெரிவித்துள்ளது.

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மற்றும் வடக்கில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை அல்லது இரவில் தீவின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த அறிவுறுத்தல் தெரிவிக்கிறது.

எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments