சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் வெற்றி: 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி!


சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்கள் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், ர்வதேச நாணய நிதியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று தலைவர் பீட்டர் ப்ரூயர் தலைமையில் கலந்துகொண்டது. 

இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவிற்கு பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமை தாங்கினார். 

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக முடிவடைந்தன.

மதிப்பாய்வு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் முடிக்கப்பட்டவுடன், இலங்கைக்கு சுமார் 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி கிடைக்கும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.

No comments