சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைது!


நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (22) பகவந்தலாவ மாலிய காப்புக்காடு பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சுரங்க நடவடிக்கைக்கு பயன்படுத்திய உபகரணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 மற்றும் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள். பகவந்தலாவ மற்றும் பெலிஹுல்ஓயாவைச் சேர்ந்தவர்கள். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பகவந்தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments