வெளியே வரும் பூதங்கள்??
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் மூலம் கைவிடப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை வழக்குகள் சூழ தொடங்கியுள்ளது.ஏற்கனவே வர்த்தகர்கள் பலரும் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட கப்ப அறவீடுகளை அம்பலப்படுத்திவரும் நிலையில் வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத நிலையில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, வியாழக்கிழமை (21) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்ற வர்த்தகர் ,இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக டக்ளஸ் தேவானந்தா முறைப்பாடொன்றை செய்திருந்தார்.எனினும் முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளின் போது டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் பிடியாணையை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டக்ளஸ் தேவானந்தா நோய்வாய்ப்பட்டிருப்பதால் அவர் நீதிமன்றில் ஆஜராக மாட்டார் என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
சுகவீனம் தொடர்பான மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தையைச் சேர்ந்த தொழிலதிபர் சுப்பிரமணியன் மனோகரன் என்பவர், 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி அல்லது அன்றைய தினத்தில் கணக்கில் பணம் இல்லை என்பதை அறிந்து தலா பத்து மில்லியன் ரூபாய் காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக, அவருக்கு எதிராக டக்ளஸ் தேவானந்தவால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
வழக்கின் முதல் சாட்சியான தேவானந்தாவுக்கு சாட்சியமளிப்பதற்கான கடைசித் திகதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
யாழ்.மாநகரசபையினை தனது கைகளில் வைத்திருந்த காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டட நிர்மாண வேலைகளில் தொழிலதிபர் சுப்பிரமணியன் மனோகரன் டக்ளஸ் பங்காளியாக இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment