போப் பிரான்சிஸ் 12 நாள் ஆசிய பசிபிக் பயணத்தை முடித்துக் கொண்டார்


87 வயதான போப்பாண்டவர், இந்தோனேசியா, பப்புவா நியூ கினியா, கிழக்கு திமோர் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தனது நீண்ட சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தார்.

ஆசிய-பசிபிக்கின் நான்கு நாடுகளில் உள்ள கத்தோலிக்க மதத்தினரைச் சந்தித்தபின் சிங்கப்பூரில் இருந்து வத்திக்கானுக்குச் சென்ற போப் பிரான்சிஸ் , தனது நீண்ட சுற்றுப்பயணத்தை வெள்ளிக்கிழமை முடித்தார்.

87 வயதான அவர் இந்தோனேசியா, பப்புவா நியூ கினியா, கிழக்கு திமோர் மற்றும் இறுதியாக சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளுக்குச் சென்றார். இவர் இப்பகுதிகளில் 12 நாட்கள் பயணம் செய்தார்.

சிங்கப்பூரின் 6 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகையில் 3.5% கத்தோலிக்கர்கள். உலகின் கத்தோலிக்க நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் கிழக்கு திமோரில்அதன் மக்கள்தொகையில் 96% கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர்களாக உள்ளனர்.

அதற்கு முன் பப்புவா நியூ கினியாவில் தொலைதூர காட்டு கிராமத்திற்கு போப் பயணம் செய்தார் . அங்குள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கினார்.

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தோனேசியாவில் , மோதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக பேசுவதற்காக தலைநகரின் இஸ்திக்லால் மசூதிக்கு அவர் சென்றார். 

No comments