திலீபன் நினைவேந்தல்:இனி தடையில்லை!
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வை நடத்த தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில் இன்றைய தினம் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நினைவேந்தலிற்கு தடை விதிக்க கோரிய காவல்துறையின் வழக்கு நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதிபதி தடை விதிக்க மறுதலித்துள்ளார்.
எனினும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கும் அதிகாரம் காவல்துறையினரிடம் இருப்பதால் இது தொடர்பில் அவர்களே இறுதி முடிவை எடுக்கலாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்னார்.
திலீபனின் நினைவிடத்திற்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் நினைவேந்தல்களுக்கு தடை விதிக்கக் கோரி காவல்துறையினர் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.
வழக்கு நேற்று விசாரணைக்காக எடுக்கப்பட்ட போது சட்டத்தரணி மணிவண்ணன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். எதிராளிகள் தரப்பில் மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா தலைமையில் சட்டத்தரணிகள்; நீதிமன்றில் முன்னிலையானார்கள்.
வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் ஏ.ஆனந்தராஜாஇ 2011ஆம் ஆண்டு சின்னங்களைப் பயன்படுத்த தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது .
எனினும் இறந்தவர்களின் நினைவேந்தல் நடத்த தடை இல்லை. இதன் பின்னர் 13 வருடங்களாக மக்கள் நினைவேந்தலை அனுஸ்டித்து வருகின்றனர்.
அவற்றைத் தடுப்பதற்கு ஜனாதிபதியோஇ பாதுகாப்பு அமைச்சோஇ நாடாளுமன்றமோ எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில்இ அஞ்சலி நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என காவல்துறையினர் கோரிக்கை விடுத்து வருவதை ஏற்க முடியாது என தெரிவித்து வழக்கை நீதிவான் முடிவுறுத்தியுள்ளார்.
Post a Comment