நாளைய தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் நாடு முழுவதும் விநியோகம்!


நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக வாக்குப் பெட்டிகள் மற்றும் அதிகாரிகளை வாக்களிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கும் முதற்கட்ட செயற்பாடுகள் இன்று காலை முதல் ஆரம்பமாகியுள்ளன.

நாடளாவிய ரீதியில் உள்ள 13,421 வாக்களிப்பு மையங்களுக்கு வாக்குப் பெட்டி மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இந்த தேர்தலுக்காக ஒரு கோடியே 71 இலட்சத்து 41,354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அதற்காக நாடளாவிய ரீதியாக 13,421 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

வாக்கெண்ணும் பணிகளுக்காக 1,713 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

No comments